Site icon Tamil News

பிரான்ஸில் 3 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி – காயத்துடன் கைதான தாய்

பிரான்ஸில் மூன்று மாத கைக்குழந்தை ஒன்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தது.

இந்த இச்சம்பவம் சென் மார்ன் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தந்தை ஒருவர் காயமடைந்த கைக்குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக வருகை தந்துள்ளார்.

குழந்தை நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைக்கு உட்படுதப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது.

சம்பவம் தொடர்பில் குறித்த குழந்தையின் 54 வயதுடைய தந்தை தெரிவிக்கையில், வேலையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது குழந்தை காயமடைந்து கிடந்ததாகவும், அவரது தாயார் வீட்டில் இருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், முதல்கட்டமாக அவரைக் கைது செய்ததுடன், சில மணிநேரம் கழித்து அவரது மனைவியை காயமடைந்த நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Exit mobile version