உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் பகுதிகளில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் இன்று (21.11) அறிவித்துள்ளனர்.
டொனெட்ஸ்க் நகரமான செலிடோவில் உள்ள மருத்துவமனை மற்றும் நிலக்கரி சுரங்கம் மீது ஏவுகணைகள் தாக்கியதாக உள்துறை அமைச்சர் இஹோர் கிளைமென்கோ டெலிகிராம் செய்தி சேவையில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவமனையின் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, ஆறு பொதுமக்கள் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம், தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.
S-300 ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரேனிய வழக்கறிஞர் அலுவலகம் பின்னர் தெரிவித்தது.