இந்தியா

பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் திட்டிய ஆசிரியர்…மாணவி எடுத்த விபரீத முடிவு!

ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்கு பொட்டு வைத்துச் சென்ற மாணவியை ஆசிரியர் திட்டியதால், மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் மாவட்டம், டெத்துல்மாரி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஹனுமன்கர்ஹி காலனியில் 17 வயது மாணவியான உஷா குமாரி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவர், பள்ளிக்கு செல்லும் போது பொட்டு வைத்து சென்றுள்ளார். இதனால், மாணவியை ஆசிரியை அறைந்ததாகவும், திட்டியதாகவும் கூறப்படுகிறது.

usha kumari / உஷா குமாரி

இந்நிலையில், மாணவி வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், மாணவி கடிதம் எழுதிவிட்டு பள்ளி சீருடையின் பாக்கெட்டில் வைத்துள்ளது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பெற்றோர், காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளிக்கு வெளியே கலவரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவியின் சடலத்துடன் டெத்துல்மாரியில் இருந்து நயா மோர் பகுதி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் குறித்து பேசிய டெத்துல்மாரி பொலிஸார் ஆஷிஷ் குமார் யாதவ், “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக செயின்ட் சேவியர்ஸ் பள்ளியின் முதல்வர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீது நாங்கள் FIR பதிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

usha kumari / உஷா குமாரி

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) தலைவர் பிரியங்க் கனூங்கோ கூறுகையில் “ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் தனது பள்ளியில் ஆசிரியரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலை கடிதம் மீட்கப்பட்டுள்ளது. FIR பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

இதற்கிடையில், தன்பாத் குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் உத்தம் முகர்ஜி,”இந்த பிரச்சினை தீவிரமானது என்றும், பள்ளி சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைக்கப்படாததால் மாவட்டக் கல்வி அலுவலரிடம் விவாதித்தோம்” எனக் கூறினார்.

(Visited 13 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content