அமெரிக்காவில் பாடசாலைகள் தொடங்கிய முதல் நாளிலேயே காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் குளிர்கால விடுமுறை முடிந்து பாடசாலை தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதிலேயே ஒருவர் உயிரிழந்தார்.
பாடசாலை முதல்வர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
டைலன் பட்லர் என்ற அந்த 17 வயது மாணவர் பின் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
டைலன் பட்லர் மிகவும் அமைதியான மாணவர் எனவும், சக மாணவர்கள் அவரை தொடர்ந்து கிண்டலடித்து கொடுமை படுத்தி வந்ததாலேயே இப்படி ஒரு படுபாதகச் செயலை அவர் செய்திருக்கலாம் எனவும் சில மாணவர்கள் தெரிவித்தனர்.
பலரை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு ஒன்றையும் பட்லர் கொண்டுவந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
(Visited 15 times, 1 visits today)