ஐரோப்பா

குரேஷியா-டுப்ரோவ்னிக் நகர மேயர் சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ள புது விதிமுறை

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று குரோஷியாவிற்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகின்றனர்.

இந்நிலையில் குரோஷியா நாட்டில் உள்ள டுப்ரோவ்னிக் என்ற நகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி சூட்கேஸ்களை எடுத்து வரக்கூடாது என புதிய விதிமுறைகளை நகர மேயர் அறிமுகப்படுத்யுள்ளார்.

அங்கு செல்லும் பயணிகள் சக்கரம் பொருந்தி இருக்கக்கூடிய சூட்கேஸ்களை பளிங்குக்கற்களால் ஆன பாதைகளில் இழுத்துச் செல்லும்போது ஏற்படும் சத்தம் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதால் நகரத்தில் வசிக்கும் மக்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக நீண்ட நாட்களாக புகார் அளித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அந்நகரத்தின் மேயர் Mato Frankovic சூட்கேஸ்களை எடுத்து வருவதற்குத் தடையை விதித்திருக்கிறார். அதேவேளை தடையைக் கடைபிடிக்காத சுற்றுலா பயணிகளுக்கு $288 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் மேயர் தெரிவித்திருக்கிறார்.

45 Awesome Things to do in Dubrovnik, Croatia in 2023 – We Seek Travel

அதேவேளை சுற்றுலாப் பயணிகள் எடுத்து வரும் சூட்கேஸ்கள் நகரத்திற்கு வெளியே சேகரிக்கப்பட்டு பின்னர் அவர்கள் தங்கியிருக்கும் முகவரிகளுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அந்நகரத்திற்கு வரும் பயணிகள் தங்களுடன் அழைத்து வரும் செல்லப் பிராணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும், சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடும்போது சரியான முறையில் உடை அணிந்திருக்க வேண்டும் என்றும் நகர மேயர் அறிவுறுத்தியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content