Site icon Tamil News

உள்நாட்டு போர் எச்சரிக்கையை வெளியிட்டது இஸ்ரேல் இராணுவம்!

இஸ்ரேல் இராணுவம் உள்நாட்டு போர் எச்சரிக்கையை இன்று (07.10) அறிவித்துள்ளது.

காசாவில் இருந்து போராளிகள் ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காசாவை இயக்கும் பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ், இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேலுக்கு எதிராக பொது கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தது.

“உங்களிடம் துப்பாக்கி இருந்தால், அதை வெளியே எறியுங்கள். இதைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது – டிரக்குகள், கார்கள், கோடரிகளுடன் வெளியேறுங்கள், சிறந்த மற்றும் மிகவும் கௌரவமான வரலாறு இன்று தொடங்குகிறது, ”என்று ஹமாஸ் இராணுவத் தளபதி முஹம்மது அல்-டீஃப் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலயைில் இஸ்ரேலிய இராணுவமும் போர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Exit mobile version