இலங்கை

வடக்கு மக்களிடம் ஆளுநர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராகக் கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவித்துக் கொள்ளக்கூடாது எனவும் வரியை சரியான வழிமுறையில் செலுத்துவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்வேண்டும் என்றும் வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது வகையில் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நிகழ்வு யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்றையதினம் (25)நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

”நாடின் நலன்கருதியதான இந்த நோக்கத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இங்கே மிக முக்கியமான ஒரு விடயமாக இருக்கின்றது.

தற்போது அதிகமானோர் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றவர்களுக்கு தெரியும் உலக நாடுகளில் எவ்விதமாக இந்த வரி அறவீடுசெய்யப்படுகின்றது என்று.

அதுமட்டுமல்லாது குறித்த வரி அந்நாடுகளின் வருமானத்தில் எத்தகைய பெரும் பகுதியாக காணப்படுகின்றது என்றும் உணர்ந்துகொள்ள முடியும்.

எனவே அந்த வகையிலே எங்களுடைய நாட்டிலே வரி அறவீடு தொடரில் மிக இலகுவான காரியமாக அல்லது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

அதேநேரம் பல பேர் அந்த வரியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் நடைமுறைகளை கையாளுகினறனர்.

எனவே நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியிலும் இந்த நாட்டிலே பல தேவைகளை நாங்கள் பெற்றுக் கொள்கின்றவர்கள் என்ற ரீதியிலும் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அத்துடன் நாங்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பவர்களாக இருக்க வேண்டும்.

இதேநேரம் அரசு ஈட்டுகின்ற வருமானத்தில் வருமான வரி மூலம் அல்லது வருமான வரி செலுத்துகின்றவர்களின் தொகை இந்த நாட்டின் மொத்த குடித்தொகையில் மிகவும் குறைவான ஒரு தொகையாகத்தான் இருக்கின்றது.

அந்த வகையிலே நாட்டினுடைய வருமான வரியை திருத்த வேண்டிய ஒரு தேவை எமது நாட்டிற்கு தேவையாக இருக்கின்றது.

அதனால் இந்த வரிக் கொள்கையில் நாங்கள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காளர்களாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
———————————–

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content