Site icon Tamil News

பாஜக ஆட்சி வேதனை ஆட்சியாகவே நடைபெற்றன

ஒன்பதுக்கு ஆண்டு கால பாஜக ஆட்சி தமிழக மக்களுக்கு வேதனை அளிக்கக்கூடிய ஆட்சியாகவே நடைபெற்றன உத்திரமேரூர் எம் எல் ஏ பேச்சு.

திமுக இரண்டு ஆண்டு ஆட்சி கால சாதனை விளக்க பொது கூட்டம் மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் திமுக இரண்டு ஆண்டு ஆட்சி கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில் தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வார்த்தைக்கு இணங்க.

தமிழக முதலமைச்சர் ஆட்சி செய்வதாகவும் இந் நல்லாட்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் பேசுகையில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதியாக அளித்தவை எல்லாம் என்பதிலிருந்து 85 சதவீதம்.

மேலும் பாஜக 9 ஆண்டுகளுக்கு முன்பு 2014 இல் போட்டியிடும் போது ஒவ்வொரு இந்திய குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவோம் என்றும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்றும் விவசாயிகளின் விலை.

வழங்குவோம் என்றும் விவசாயிகளின் விலை பொருள்களுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்போம் என்று வாக்குறுதியை அளித்து வெற்றி பெற்றனர் ஆனால் எதையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

மேலும் ஐந்து ஆண்டுகள் கழித்து 2019 மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்றும் ராணுவ வீரர்கள் மீது குண்டு எறிந்து பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர் எனக் கூறினார்.

ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பாஜக ஒன்றுமே செய்யவில்லை என்றும் பெட்ரோல் விலை டீசல் விலை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்றும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு டீசல் விலை 50 ரூபாய் இருந்தது தற்போது 95 ரூபாய்க்கு.

விற்கப்படுகின்றன விலைவாசி ஏற்ற மட்டுமே பாஜக அரசு தந்த மக்கள் பரிசாகவும் ஆனால் திமுக அரசு 2007 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்படும் இலவச தொலைக்காட்சி பெட்டி.

வழங்கப்படும் என அறிவித்து அதனையும் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்ட அரசு திமுக அரசு என தெரிவித்தார்.

திமுக அரசால் வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் அடுப்பு அப்பொழுது 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் தற்போது பாஜக 9 ஆண்டுகால ஆட்சியில் 1200 ரூபாய்க்கு விற்கப்படுவது பாஜக அரசு மக்களுக்கு சொன்னதை.

செய்யாத அரசாகவும் மக்களுக்கு வேதனையை மட்டும் அளிக்கக்கூடிய அரசாக பாஜக அரசு 9 ஆண்டு காலமாக இந்தியாவில் ஆட்சி புரிகின்றன என கூறினார்.

ஆனால் திமுக ஆட்சி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சொன்னதை செய்யக்கூடிய ஆட்சியாகவும் சொல்லாததையும் மக்கள் தேவையை புரிந்து செய்யக்கூடிய ஆட்சியாகவும் விளங்குகின்றன.

மேலும் தொடக்க கல்வி மாணவர்களுக்கு ஜூன் ஒன்று முதல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் திமுகவின் மகத்தான திட்டமாக மக்கள் வரவேற்க கூடிய திட்டமாக விளங்குகின்றன என திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால ஆட்சி

சாதனை விளக்க கூட்டத்தில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்களுக்கு தென்னங்கன்று பரிசாக அளித்து வீட்டுக்கு ஒரு தென்னங்கன்று என்ற முறையில் அனைவருக்கும் இலவசமாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் படு நெல்லி பாபு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி,

ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி கருணாநிதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version