ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலை – ஆயிர கணக்கான தாக்குதல் சம்பவங்கள்

பிரான்ஸில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான யூத எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

உள்துறை அமைச்சர் Gérald Darmanin இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்திய பின்னர், பிரான்ஸில் யூத மதம் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

சுவற்றில் நாஸி இலட்சணைகள் வரையப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தில் பிரான்சில் 1,159 சம்பவங்கள் இதுபோல் பதிவாகியுள்ளன.

2022 ஆம் ஆண்டில் பதிவான மொத்த யூதமதத்துக்கு எதிரான தாக்குல்களோடு ஒப்பிடுகையில் இது கணிசமான அதிகரிப்பாகும்.

அதேவேளை, இந்த ஒரு மாத காலத்தில் 518 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பலருக்கு சிறைத்தண்டனையும், பலருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content