Site icon Tamil News

இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் பொது எதிரி: இம்மானுவேல் மக்ரோன்

இஸ்ரேல்: இஸ்ரேல்-பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கு பயங்கரவாதம் பொது எதிரி என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சந்தித்து பேசியுள்ளார்.

இஸ்ரேலுக்கு பிரான்ஸ் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்க அதிபர், பிரித்தானிய பிரதமர் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் பிரான்ஸ் அதிபரும் அங்கு விஜயம் செய்துள்ளார். காசாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் இருபுறமும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Exit mobile version