Site icon Tamil News

F-16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கினால் பெரிய அபாயங்கள் ஏற்படும் – ரஷ்யா எச்சரிக்கை!

உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்க மேற்குலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பெரிய அபாயங்கள் ஏற்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்கினால், “பெரிய ஆபத்துக்களை” எதிர்கொள்ளும் என்று ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் க்ருஷ்கோவை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

F-16 போர் விமானங்களில் உக்ரேனிய விமானிகளுக்கான கூட்டு நேச நாட்டுப் பயிற்சித் திட்டங்களை வாஷிங்டன் ஆதரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று G7 தலைவர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யா துணை வெளியுறவு அமைச்சர்,  மேற்கத்திய நாடுகள் இன்னும் விரிவாக்க சூழ்நிலையை கடைபிடிப்பதை நாங்கள் காண்கிறோம். இது தங்களுக்கு மிகப்பெரிய அபாயங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.

“எதுவாக இருந்தாலும், இது எங்கள் எல்லா திட்டங்களிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், மேலும் நாங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய தேவையான அனைத்து வழிகளும் எங்களிடம் உள்ளன என்றும் அவர் கூறினார்.

Exit mobile version