Site icon Tamil News

புஸ்ஸா சிறைச்சாலையில் திடீர் சோதனை!!! கைத்தொலைபேசிகள் மீட்பு

புஸ்ஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இரண்டு கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இது இடம்பெற்றுள்ளது.

ஏ மற்றும் பி வார்டுகளில் கைத்தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்த இரண்டு வார்டுகளிலும், கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்படும் இரண்டாம் தர குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் சக்திவாய்ந்த குற்றவாளிகளின் சீடர்கள் என சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

Exit mobile version