Tamil News

இலங்கை – முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப்பொருள் மீட்பு!

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் நேற்று (19.11)  மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று (18.11) இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை கைவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திலிருந்து  பொதி செய்யப்பட்ட  4 கட்டு ஹெரோயினுடன் 10 மில்லி கிராமும்  4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்கள் முள்ளியவளை  பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,  சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version