Site icon Tamil News

இலங்கை: அரச நில அளவையாளர்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க ஒப்புதல்

நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரச நில அளவையாளர்களுக்கு சம்பளம் வழங்க அரசாங்கம் தயார் என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அரச நில அளவையாளர்கள் சங்கம் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக உரிய சம்பளம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா, அரசாங்க நில அளவையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

இந்த மனு, நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நில அளவைத் திணைக்களத்தின் செயற்றிட்டங்களை தனியார் நில அளவையாளர்களுக்கு வழங்குவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை காரணம் காட்டி அரசாங்கம் தமது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை நிறுத்தியதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், மனுதாரர்கள் அரசாங்கத் திட்டங்களில் கையொப்பமிட மறுத்துவிட்டதாகவும், சம்பந்தப்பட்ட திட்டங்களில் கையொப்பமிட சம்மதித்தால் இடைநிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இதன்படி, தாக்கல் செய்யப்பட்ட உண்மைகளை மேலும் பரிசீலிப்பதற்காக, மனுவை அக்டோபர் 13ஆம் தேதி திரும்பப்பெறுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Exit mobile version