2 மாதங்களில் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் சினோபெக் நிறுவனம்!

இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்கீடு முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்
திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் இரண்டு மாதங்களில், 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது
அதன் பின்னர் தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கப்படும், பின்னர் நடைமுறையில் உள்ள ஞசு குறியீட்டு முறைமையும் நீக்கபடும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)