Site icon Tamil News

லண்டன் உட்பட முக்கிய இடங்களுக்கு விமான சேவைகளை அதிகரித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முக்கிய நகரங்களுக்கு அதனுடைய விமானச் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் அதிகமான பயணிகள் பயணம் செய்ய கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஒக்டோபர் மாதம் வரை நடப்பில் இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திற்கு அன்றாடம் விமானச் சேவையை நிறுவனம் வழங்கும் என்று கூறியுள்ளது.

தற்போது வாரத்திற்கு 5 முறை விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன. லண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்திற்கு ஏற்கனவே ஒவ்வொரு நாளும் 4 விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

எனவே விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் 5 விமானச் சேவைகள் பிரித்தானியாவுக்கு செல்லும்.

ரோம், மிலான், பார்சலோனா போன்ற நகரங்களுக்கும் விமானச் சேவைகள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version