Site icon Tamil News

ஜப்பானில் மருத்துவமனையொன்றில் துப்பாக்கிச்சூடு!

ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இன்று (31.10) நடந்துள்ளது.

மத்திய ஜப்பானில் உள்ள டோடா நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது,  இதில் இருவர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

40 அல்லது 50 வயதுடைய சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், நகருக்கு அருகில் உள்ள வாராபியில் உள்ள தபால் நிலையத்தில் ஒருவர் பிணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version