Site icon Tamil News

பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு – இருவர் பலி – இருவர் காயம்

பிரான்ஸில் Gard நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை இரவு அருந்தகம் ஒன்றின் முன்பாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் நல்வர் காயமடைந்தனர். அவர்களில் 24 மற்றும் 25 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

காயமடைந்த இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். நள்ளிரவின் பின்னர் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version