Site icon Tamil News

யாழில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பாவித்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த மாணவனுடன் போதைக்கு அடிமையாகி உள்ள ஏனைய மாணவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கு போதைப்பொருளை விநியோகம் செய்யும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவனை தடுத்து வைத்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனனர்.

Exit mobile version