ஐரோப்பா

ஜெர்மனியில் மில்லியன் கணக்கான மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஜெர்மனியில் அண்ணளவாக 1.3 மில்லியன் மக்கள் சூதாட்டத்துக்கு அடிமையானவர்களாக உள்ளார்கள் என புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது குலுக்ஸ்பீட் என்று சொல்லப்படுகின்ற லொத்தர் விளையாட்டுக்கள் மற்றும் ஔடோமாட் என்று சொல்லப்படுகின்ற சூதாட்ட இயந்திரங்களில் விளையாடுகின்றவர்கள் மற்றும் ஸ்போட் வெட் என்ற விளையாட்டு போட்டிகளில் லொத்தர்களை பாவிப்பவர்களுடைய எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது அதை விட 3.3 மில்லியன் பேர் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஜெர்மன் சனத்தொகையில் 55 சதவீதமானவர்கள் இவ்வாறு சூதாட்டத்தில் பங்குபற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஜெர்மன் சனத்தொகையில் 30 சதவீதமானவர்கள் இவ்வாறு சூதாட்டங்களில் விளையாடியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த க்ருல்ஸ்பில் என்று சொல்லப்படுகின்ற சூதாட்ட விளையாட்டால் அரசாங்கமானது 4.8 மில்லியன் யூரோக்கள் இலாபம் கிடைத்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content