Site icon Tamil News

அதிர்ச்சி சம்பவம்!! குடி போதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்ற தந்தை

இந்திய மாநிலம், உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் 2 வயது குழந்தையை தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரஃப் என்பவருக்கும், சைஸ்தா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.இதில், 2 குழந்தைகளுக்கு தாயான சைஸ்தாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. இவர்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இதில் அஷ்ரஃப் மதுபோதைக்கு அடிமையாகி அடிக்கடி சைஸ்தாவையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று மதுபோதையில் இருந்த அஷ்ரஃப் தகராறு செய்துள்ளார். அப்போது, மனைவியையும், 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதில், மனைவியையும், ஒரு குழந்தையையும் கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல், 2 வயது குழந்தையை தரையில் பல முறை அடித்துள்ளார். இவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது 2 குழந்தைகளும் மயங்கி கிடந்துள்ளனர்.

அவர்களை, உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில், 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.இதற்கு காரணமான அஷ்ரஃபை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version