Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – மகளை தாக்கி விசம் கொடுத்த தந்தை

மஸ்கெலியா – மொக்கா தோட்டத்தில் தனது மகளை தாக்கி, விசம் கொடுத்ததற்காக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் மூன்று பெண் பிள்ளைகள் பாதுகாப்பு நிமித்தம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான அவரின் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சந்தேகநபர் கடந்த 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 20 வயதான யுவதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர் பல நாட்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து யுவதியின் தந்தை மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

யுவதியின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தந்தையின் பாதுகாப்பில் மூன்று குழந்தைகளையும் விட்டு விட்டு வௌிநாடு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version