ஆசியா

தாய்லாந்து உட்கொண்டதற்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்க பெண்ணின் அதிர்ச்சி செயல்

தாய்லாந்தில் உள்ள உணவகத்தில் உட்கொண்ட பிறகு பணம் செலுத்துவதைத் தவிர்க்க மனநோயால் பாதிக்கப்பட்டது போல் பெண் ஒருவர் நடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த உணவகத்தின் உரிமையாளர் அது குறித்துத் தகவல் வெளியிட்டார். உணவகத்தில் அந்தப் பெண் உணவை வாங்கி உட்கொண்டுள்ளார்.

சாப்பிட்டு முடித்த பிறகு பணம் செலுத்துவதற்குத் தமது நண்பருக்காகக் காத்திருப்பதாக அவர் கூறினார். அவ்வாறு காத்திருந்த நேரத்தில் அவர் தன்னுடன் சொந்தமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

அதன் பின் உணவகத்தின் கழிப்பிடத்துக்குச் சென்ற அந்தப் பெண், அங்கு குளித்தார். குளித்த பிறகு உணவகத்தைவிட்டுப் பணம் செலுத்தாமல் சென்றார்.

அந்தப் பெண்ணின் செயல்களைப் பற்றி மற்ற வணிகர்களை எச்சரித்துள்ளார் உணவகத்தின் உரிமையாளர்.

அந்தப் பெண் உண்மையில் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரின் குடும்பம் அவரை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று உரிமையாளர் கேட்டுக்கொண்டார்.

(Visited 6 times, 1 visits today)
See also  9 மாத மகனைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட இஸ்ரேல் பெண்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content