ஐரோப்பா

பிரான்ஸில் மதகுரு போன்று ஆடை அணிந்த நபரின் அதிர்ச்சி செயல்

பிரான்ஸில் மதகுரு போன்று ஆடை அணிந்த ஒருவர், ரயில் நிலையத்தில் வைத்து யூத நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

La Chapelle மற்றும் Gare du Nord நிலையங்களுக்கு இடையிலான நடைமேடை (couloirs ) பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றது.

புதன்கிழமை நண்பகலின் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தாக்குதலுக்கு இலக்கான நபர் பொலிஸாரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார்.

மதகுரு போன்று நீண்ட ஆடை அணிந்திருந்த ஒருவர் தன்னைத் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து, La Chapelle நிலையத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் சிரியாவைச் சேர்ந்தவர் எனவும், தனக்கு 14 வயது எனவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் காயமடையவில்லை என்றபோதும், அவர் சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

(Visited 14 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content