Site icon Tamil News

உணவு, உடையின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மூன்று குழந்தைகள் மீட்பு

உணவு மற்றும் உடையின்றி மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மூன்று குழந்தைகளை மீட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடைய 12 வயது சிறுமி மற்றும் அவரது 7 மற்றும் 8 வயதுடைய இரண்டு சகோதரர்கள் பாதுகாப்பு கருதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மினுவாங்கொடை உன்னருவ பிரதேசத்தில் சிகிச்சை இன்றி இருந்த தாயை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சிறுவர்கள் இருவரும் நிலவும் வறுமையின் காரணமாக பாடசாலை படிப்பை கைவிட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூன்று குழந்தைகளையும் தங்கள் பாதுகாப்பில் எடுத்துள்ள பொலிசார் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

Exit mobile version