Site icon Tamil News

ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டது!! காஸா பகுதிக்குச் சென்ற உதவிப் பொருட்கள்

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிலை இருந்து 15 நாட்கள் கடந்துவிட்டன.

இந்நிலையில், காஸா பகுதியில் சிக்கியுள்ள பாலஸ்தீனியர்களுக்காக மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நுழைவதற்காக ரஃபா நுழைவாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி 20 வாகனங்கள் காஸா பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமாக இவ்வாறு மருந்துகள் அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இரு தரப்பினர்களுக்கும் இடையிலான போரில் இதுவரையில் 4500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version