Site icon Tamil News

இவர்களை கண்டால் உடன் அறிவியுங்கள் – பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை

பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் மற்றும் பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பத்தரமுல்லை பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தோட்டத்தை புனரமைப்பது தொடர்பாக சந்தேநபர் சுமார் ஒரு கோடி ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தெஹிவளை மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களது புகைப்படங்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், தகவல் அறிந்தவர்கள் 071-81 37 373 அல்லது 011 28 52 556 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version