இலங்கை

பொலிசார் அச்சுறுத்தல்: நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர் தரணி ஆகியவர்களை பொலிசார் இன்று வியாழக்கிழமை (23) சேட்டை பிடித்து துப்பரவு பணியை செய்யவிடாது அச்சுறுத்தல் செய்த பொலிசாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எதிர்வரும் 26ம் திகதி மாவீரர் தினத்தையிட்டு தம்ழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஆதரவுடன் மக்கள் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி மாவீர் துயிலும் இல்லத்தினை துப்பரவு பணியில்ஈடுபட்டுக் கொண்டிருந்த் போது அங்கு சென்ற வவுணதீவு பொலிசார் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாள் த.சுரேஸ் துப்பரவு பணியை மேற்கொள்ளவிடாது அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் அவர்கள் தொடர்ந்து துப்பரவு பணியை செய்யமுடியாது அங்கிருந்து வெளியேறினர் அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீர் துயிலும் இல்லத்தில் பொது மக்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற வாழைச்சேனை பொலிசார் அவர்களை அச்சுறுத்தியதுடன் தரணி என்ற இளைஞனின் சேட்டை பிடித்து இழுத்து கையடக்க தொலைபேசியை பறித்து அச்சுறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரு பொலிஸ் நிலைய பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு எதிராக நீதி கோரி மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் பொலிசாரின் அச்சுறுத்தலுக்கு உள்ளான இருவரும் முறைப்பாடு செய்ததுள்ளனர்.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content