இலங்கை

800 திரைப்படத்தை மக்கள் சிங்கள மொழியிலும் பார்க்க வேண்டும்: முத்தையா முரளிதரன்

எம் மண்ணின் மைந்தனான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் 800 திரைப்படம்.

உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட “800” திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில் அது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (21) கொழும்பில் நடைபெற்றது.

முத்தையா முரளிதரன் மற்றும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த முத்தையா முரளிதரன்,

“முதலில் என் சகோதரர் அர்ஜுனனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.அந்த காலத்திலிருந்து என்னை ஒரு தந்தை போல் கவனித்துக்கொண்டார்.அவர் இல்லையென்றால் நான் இங்கு வந்து பேசும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு கேப்டன் கூட அவ்வாறு செயற்படவில்லை. அதை செய்யவும் முடியாது.

இந்தப் படத்தை சிங்களத்தில் காட்ட அனுமதித்த அமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

“இந்த நாட்டிலுள்ள அனைத்து சிங்கள மக்களும் என்னை நேசித்தார்கள் மற்றும் எனக்கு நிறைய உதவினார்கள். அவர்கள் இந்த திரைப்படத்தை சிங்கள மொழியில் பார்க்க வேண்டும்.” என்றார்.

See also  இலங்கையில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் இறக்குமதி ஆரம்பம்!

இந்நிலையில் இப்படம் தற்போது உலகம் முழுவதும் நான்கு மொழிகளில் திரையிடப்படுகிறது

அறிமுக இயக்குநர் ஸ்ரீபதி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘800’. இதில் மதுர் மிட்டல் மகிமா நம்பியார், ஆடுகளம் நரேன், அருள் தாஸ் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார்.

800 விக்கெட் எடுத்து சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதனை ஸ்ரீதேவி மூவிஸ் எனும் நிறுவனம் வழங்குகிறது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content