தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழந்துள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆகையால் பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டாலும் 50 சதவீதம் அதிகமான வாக்குபலத்தை பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என நுவரெலியாவில் நடைபெற்ற 2023- 2024 தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.