ஐரோப்பா

ஸ்பெயினின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள பெட்ரோ சான்செஸ்!

பிரிவினைவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்த சர்ச்சைகளுக்கு இடையே ஸ்பெயினின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஸ்பெயினில் ஜூனில் நடந்த தேர்தலில் மத்திய வலது பாப்புலர் கட்சி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றது. ஆனால் மூன்றாவது இடத்தை பிடித்த தீவிர வலதுசாரி வோக்ஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் அரசு அமைப்பதற்கான ஆதரவை பெற முடியவில்லை. இந்நிலையில் பொறுப்பு பிரதமராக இருந்த பெட்ரோ சான்செஸின் சோசலிச கட்சியானது 121 இடங்களை பிடித்து இரண்டாவது இடத்தை பிடித்தது. ஆனால் ஆட்சி அமைப்பதற்கு போதுமான ஆதரவை பெறவேண்டி இருந்தது.

இந்நிலையில் 2 நாட்கள் விவாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் 350 உறுப்பினர்கள் கொண்ட கீழவையில் 179 பேர் பெட்ரோ சான்செஸ்சுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வலது சாரி எதிர்கட்சிகள் மட்டும் அவருக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content