இலங்கை செய்தி

களனிப் பல்கலைக்கழகத்தில் டட்லி சிறிசேனவிற்கு எதிர்ப்பு

களனிப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா பாடநெறியில் விரிவுரை ஒன்றுக்கு வந்த பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன, விரிவுரையை முடித்துக்கொண்டு திரும்பும் போது மாணவர்கள் குழுவொன்றின் கடும் எதிர்ப்பைச் சந்தித்தார்.

டட்லி சிறிசேன தனது விரிவுரையை முடித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் போது, ​​மாணவர்கள் அவர் பயணித்த காரை நிறுத்தி அவரை திட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டட்லி சிறிசேன பல்கலைக்கழகத்திற்கு அழைத்து வருவதற்கு தகுதியற்றவர் எனவும், விரிவுரை ஆற்றுவதற்கு அவருக்கு தகுதி இல்லை எனவும் கூறி மாணவர்கள் குழுவொன்று காரை சுற்றி வளைத்துள்ளனர்.

அவ்விடத்திற்கு வந்த விரிவுரையாளர்கள் குழுவினர் மாணவர்களுடன் கலந்துரையாடி டட்லி சிறிசேனவை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் டட்லி சிறிசேன கூறுகையில், இது ஒரு சிறு மாணவர் குழுவின் போராட்டம் எனவும், அதனை கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)
See also  இலங்கை: அரச நிறுவனங்களுக்கு மீள வழங்கப்பட்டுள்ள 19 வாகனங்கள்!
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content