இலங்கை

மாணவர்களுக்கு மின்னஞ்சல் குறித்து குற்றப்புலனாய்வினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பாடசாலை மாணவர்கள் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும் போது தமது சரியான வயதைக் குறிப்பிட வேண்டும், அத்துடன் தமது பெற்றோரின் தகவல்களை வழங்கக் கூடாது எனவும் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாடுகள் தற்போது அதிகமாக இருப்பதால் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசியைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே கைத்தொலைபேசிகளை வழங்கும் போது மின்னஞ்சல் கணக்குகளைத் திறக்கும் போது பெற்றோரின் தகவல்களை (வயது) பதிவு செய்வதால் சிறார்கள் எந்தவொரு வலைத்தளத்திற்கும் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அவ்வாறின்றி பிள்ளைகளின் வயது உள்பட பிற சரியான தகவல்களை வழங்கும் பட்சத்தில், பொருத்தமற்ற இணையத்தளங்களுக்கு சிறுவர்கள் உள்நுழைவதையும் இணையத்தின் செயல் திறனையும், இணைய அமைப்பானது தானாகவே கட்டுப்படுத்தும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Best email providers of 2023 | TechRadar

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு கூடிய போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் கைத்தொலைபேசிகள் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் (TRC) அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், சட்டவிரோத அல்லது குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்படும் போது அதை விரைவாக சமாளிக்கும் திறன் இவ்வகையான கைபேசிகளுக்கு உள்ளது என அவர்கள் அறிவுறுத்தினர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content