ஆசியா

வடகொரியா ஏவுகணையை ஏவும் வாய்ப்பு – ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு தகவல்

கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது. இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக வடகொரிய அரசாங்கம் கூறியது. ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்திருந்தது. மேலும் தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருதார்.

North Korea is likely to launch a missile – Japan Ministry of Defense  Information

இந்நிலையில் வடகொரியா ஏவுகணையை ஏவிவிட்டதாக தகவல் வெளியானைதைத் தொடர்ந்து, ஒகினாவாவின் தெற்குப் பகுதியில் ஜப்பான் தனது ஏவுகணை எச்சரிக்கை அமைப்பைச் செயல்படுத்தியது. மேலும் “தயவுசெய்து கட்டிடங்களுக்குள் அல்லது நிலத்தடிக்குள் தங்குமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தது.எச்சரிக்கை விடுக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு, எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் ட்வீட் செய்தது. முன்னதாக அறிவிக்கப்பட்ட ஏவுகணை ஜப்பானுக்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

See also  நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 148 பேர் மரணம்

இந்த சூழலில் வட கொரியா இன்று (31) தெற்கு நோக்கி விண்வெளி செயற்கைக்கோளை ஏவியது என்றும், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் அவசர எச்சரிக்கைகள் மற்றும் சுருக்கமான வெளியேற்ற எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டது என்றும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவல்படி, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது நாட்டின் விண்வெளி நிறுவனத்திற்கு இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தயாரிப்புகளை இறுதி செய்யுமாறு உத்தரவிட்டார் என்று தெரிவித்திருந்தது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content