Site icon Tamil News

காதலில் விருப்பமில்லை!! பேருந்தில் வைத்து பெண்ணை கத்தியால் குத்திய நபர் – கொழும்பில் சம்பவம்

காதலில் விருப்பமில்லாத காரணத்தினால் தனது உறவினரை பேருந்தில் வைத்து கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய சந்தேகநபர் கத்தியுடன் கைது செய்யப்பட்டதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய காயமடைந்த யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சந்தேக நபரும் காயமடைந்த நபரும் காலியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நாரஹேன்பிட்டிக்கு பேருந்தில் வந்து நாரஹேன்பிட்டி கிருள வீதி அலுவலகத்திற்கு முன்பாக பேருந்தில் இருந்து இறங்குவதற்கு தயாரான போது அருகில் வந்த சந்தேகநபர் அவர் வைத்திருந்தகத்தியை எடுத்துள்ளார்.

அவரது பை மற்றும் அவரது உடலில் பல இடங்களில் குத்தியது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கத்தியால் தாக்கியதில் யுவதியின் வலது கை முழங்கை பகுதியிலும், இடது காலின் முழங்காலுக்கு கீழ் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version