Site icon Tamil News

முகேஷ் அம்பானியுடன் கைகோர்க்கும் முத்தையா முரளிதரன்

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் மாபெரும் திட்டமொன்றுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் குளிர்பான சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் புதிய குளிர்பான நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறியப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, முரளிதரனின் சிலோன் பெவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனம், கேம்பா கோலாவுக்கான டின் பொதிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

அந்த பேக்கேஜிங்கிற்காக சிலோன் பெவரேஜ்ஸ் எதிர்காலத்தில் இந்தியாவில் பேக்கேஜிங் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் Cylon Beverages Sri Lanka தொழிற்சாலை நிறுவப்படும் வரை டின்னில் அடைக்கப்பட்ட Campa Cola ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

எவ்வாறாயினும், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் எதிர்காலத்தில் குளிர்பான சந்தையில் போட்டி நிறுவனமாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version