இலங்கையில் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் திரு இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இவ்வாறு கூறினார்.
மின்சார உற்பத்தி மூலப்பொருட்களை சேகரிப்பது தொடர்பாக அதன் சப்ளையர்களுடன் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் மின் கட்டண குறைப்பு திட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
(Visited 13 times, 1 visits today)