Site icon Tamil News

இலங்கையின் பல பகுதிகளில் மின்னல் குறித்த எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்கம் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21.11) வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழை,  பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version