ஆசியா

பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகளைக் குறிவைத்த கடத்தல் கும்பல் கைது

பிலிப்பைன்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சீன, மலேசிய சுற்றுப்பயணிகளைக் குறிவைத்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை பிலிப்பைன்ஸ் உள்துறை அமைச்சர் பென்ஹர் அபாலோஸ், ஜூன் 5ஆம் திகதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் முன் நிறுத்தினார்.

சந்தேக நபர்களில் உளவுப் பிரிவு உயர் அதிகாரியான மேஜர் கிறிஸ்டெல் கார்லோ வில்லானுயேவாவும் ஒருவர். மற்றவர்கள் சார்ஜெண்ட் பதவி வகிப்பவர்கள்.

கடத்தல் கும்பலில் குறைந்தது 14 பேர் இருப்பதாக நம்பப்படுகிறது.அவர்களில் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் மலேசியர் ஒருவரும் அடங்குவர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஜூன் 2ஆம் திகதியன்று சீனாவைச் சேர்ந்த மூன்று ஆண்களும் ஒரு மலேசியரும் கடத்தப்பட்டனர்.அதற்கு இந்தக் கும்பல்தான் காரணம் என்று நம்பப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)
See also  இஸ்ரேல் மீது உடனடி ஏவுகணைத் தாக்குதல் நடத்தவுள்ள ஈரான்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content