இலங்கையில் பெரும்பாலான தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தகவல்!
இந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் சமூகத்தை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சமூக பொலிஸ் ஸ்தாபனத்தின் ஐந்தாம் கட்டமாக கொழும்பு மத்திய பிரிவின் சமூக பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் வைபவம் நேற்று (20) மாளிகாவத்தை பி.டி.சிறிசேன விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
08 பொலிஸ் களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 2,100 சமூக பொலிஸ் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.