Site icon Tamil News

வர்த்தக பயணமாக இந்தியா சென்ற இலங்கையர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதா தகவல்!

இலங்கையில் இருந்து வியாபாரத்திற்காக சென்னைக்கு சென்ற நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சந்தேக நபர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நபரின் மகள் என அடையாளம் காணப்பட்ட பெண் ஒருவர், தனது தந்தையை கடத்திய சிலரிடமிருந்து 15 இலட்சம் இந்திய ரூபாய் கப்பமாக கோரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட நபரை கண்டுபிடிக்கவும், விசாரணையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்யவும் காவல்துறையினரால் முடிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version