Site icon Tamil News

ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ள இஸ்ரேல்

காஸா போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல், ஈரானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

அதன்படி, காஸா போரில் ஹமாஸுடன் ஹிஸ்புல்லா கூட்டு சேர்ந்தால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் கூறுகிறது.

இஸ்ரேல் ஈரானை பாம்புடன் ஒப்பிட்டது. அதன்படி, காஸா போரில் ஹிஸ்புல்லா ஹமாஸுடன் இணைந்தால், பாம்பின் தலையில் அடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதை இஸ்ரேல் பொருளாதார அமைச்சர் நிர் பர்கட் அறிவித்தார். அவர் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஹமாஸுடன் ஹிஸ்புல்லா இணைந்தால் ஈரானில் உள்ள அயதுல்லாக்கள் பூமியில் இருந்து அழிந்து விடுவார்கள் என இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் நிர் பார்கெட் தெரிவித்துள்ளார்.

காஸாவில் ஹமாஸ் செயல்படும் அதே வேளையில், பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லா செயல்படுகிறது.

அதன்படி, காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் இருந்து இஸ்ரேலின் இலக்குகளை ஹிஸ்புல்லா தொடர்ந்து தாக்கி வருகிறது.

இதன் காரணமாக லெபனானின் தெற்கு எல்லையில் இன்று போர் பதற்றம் நிலவுகிறது. ஈரான் ஹிஸ்புல்லாவுக்கு தலைமை தாங்கி அவர்களுக்கு நிதி உதவி மற்றும் இராணுவ உதவிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

Exit mobile version