மத்திய கிழக்கு

காஸாவில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல்

காஸாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் வேளையில் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.உதவிப் பொருள்களை வழங்கும் குழுக்கள், பங்காளி நாடுகள் ஆகியவை விடுத்த எச்சரிக்கைகளையும் தாண்டி இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காஸாவில் நூறாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களில் பலர் தஞ்சம் புகுந்துகொள்ள ராஃபாதான் எஞ்சியிருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்தும் வெளியேறவேண்டிய சூழல் நிலவுகிறது.

சனிக்கிழமை (மே 11) மாலை வட காஸாவின் சில பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் இடம்பெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பஞ்சம் முழுவீச்சில் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டது.

Israel Gaza war: More Rafah evacuations as Israel steps up operations

ஜபால்யாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.

வீடுகளிலிருந்து வெளியேறிய பொதுமக்களை கான் யூனிஸ் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மவாசி எனும் சிற்றூருக்கு இடம் மாறிக்கொள்ளுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ஆனால், திரளாக வரும் மக்களைக் கையாள அப்பகுதியில் போதுமான வசதி கிடையாது என்று நிவாரண அமைப்புகள் சொல்கின்றன.அதேவேளை, எஞ்சியிருக்கும் ஹமாஸ் படையினரை ஒழிக்க ராஃபாவில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் தாங்கள் இருப்பதாக இஸ்ரேல் எடுத்துரைத்துவருகிறது.

சுமார் 300,000 காஸா மக்கள் மவாசியை நோக்கிச் சென்றதாக சனிக்கிழமையன்று இஸ்ரேலியப் படைகள் தெரிவித்தன.மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் மீண்டும் உத்தரவிட்டிருப்பது அனைத்துலக அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content