Site icon Tamil News

காசா தொடர்பில் ஈரானின் கடுமையான முடிவு

காசா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல்கள் தொடர்பில் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் பதிலளிக்க வேண்டும் என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரபுத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இதனைத் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெஹ்ரான் மற்றும் ரியாத் இடையே பல ஆண்டுகளாக இருந்த போட்டி முடிவுக்கு வந்த பின்னர் ஈரானிய நாட்டு தலைவர் ஒருவர் சவூதி அரேபியாவிற்கு செல்வது இதுவே முதல் முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version