ஆசியா

ஈரான்- டாம்கான் நகரில் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து; 6 தொழிலாளர்கள் பலி!

ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. 400 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலையில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த தொழிலாளர் நலத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு இதே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். 2017ல் ஆசாத் ஷாஹர் நகரில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 43 தொழிலாளர்கள் இறந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோபம் அதிகாரிகள் மீது திரும்பியது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
See also  மலேசியாவில் 12 வயதில் சாதனை - பல்கலைக்கழகத்தில் இணையும் சிறுவன்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content