Site icon Tamil News

எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் குறைவடையும் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால்,  வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்படி  91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5 சதவீதம்  குறைந்துள்ளதுடன் 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4 சதவீதம் குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Exit mobile version