Site icon Tamil News

இலங்கைக்கு எதிராக ஐசிசி தடைகளை விதிக்கலாம்!!!! ஜனாதிபதி

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபைக்கு பதிலாக இடைக்கால கிரிக்கெட் குழு நியமிக்கப்படுவதே இதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இடைக்கால குழுவை நியமிப்பதால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து ஆராய நான்கு அமைச்சரவை அமைச்சர்களும் குழுவொன்றை நியமித்துள்ளனர்.

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை கலைத்து இடைக்கால குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி டி சில்வா உள்ளிட்டோர் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்று இரண்டு வாரங்களுக்கு வர்த்தமானியை இடைநிறுத்தியுள்ளனர்.

Exit mobile version