நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எந்தவொரு நிர்மாணத்திற்கும் தனது பெயரைப் பெயரிட மாட்டேன் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திரு அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என எந்தப் பகுதிக்கும் தனது பெயர் சூட்டப்பட மாட்டாது என்றும், பிறப்புச் சான்றிதழில் தனது பெயர் மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.