Site icon Tamil News

முல்லைத்தீவு பகுதியில் இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் கணவர் வழங்கிய வாக்குமூலம்!

முல்லைத்தீவு – நீராவிப்பிட்டி பகுதியில் இளம் பெண்ணை கொலை செய்து வீட்டின் கழிப்பறை பகுதியில் சடலத்தை புதைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்படி அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,  எங்கள் இருவருக்கு இடையிலும் ஒவ்வொருநாளும் குடும்ப பிரச்சினை ஏற்படும்.

சம்பவம் தினத்தன்று இருவரும் தாக்கிக்கொண்டோம். நான், மனைவியின் கழுத்தில் தாக்கினேன், அவள் நிலத்தில் விழுந்தாள், நீண்ட நேரம் எழும்பவில்லை தொட்டுப்பார்த்தேன் இறந்துவிட்டாள்.

என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டுக்கு பின்புறமாக மலசலகூடத்துக்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டு, அங்கிருந்து சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 23 வயதான பெண்ணும், முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதான ஆணும் திருமணம் முடித்து நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

Exit mobile version