Site icon Tamil News

கனடாவில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் உயிரிழப்பு

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடற்கரையை அண்மித்த ஆற்றில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், திடீர் கடல் அலை காரணமாக அவர்கள் ஆபத்தில் சிக்கியதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

4 குழந்தைகள் உட்பட 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஆனால் அதற்குள் அவர்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் 30 வயது கடந்த ஆண் ஒருவர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இரவு 2 மணிக்கு அவசர உதவி கேட்டு அழைப்பு விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவயிடத்தில் இருந்து 6 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version